Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

ADDED : ஜன 03, 2024 12:33 AM


Google News
புதுச்சேரி : பீடி நெருப்பால் தீ பிடித்து எரிந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கருவடிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதம், 60; கொத்தனார். இவர் கடந்த 18 ம் தேதி இரவு 12:00 மணியளவில், குடித்துவிட்டு, துாங்கினார். அப்போது அவர் பிடித்த பீடியின் நெருப்பு போர்வையில் பட்டு தீப்பிடித்தது.

இதில் அவர் உடல் முழுதும் தீப்பிடித்து எரிந்தது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பாலதண்டாயுதம் நேற்று முன்தினம் இறந்தார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us