Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை இன்று கூடுகிறது குடிநீர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சட்டசபை இன்று கூடுகிறது குடிநீர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சட்டசபை இன்று கூடுகிறது குடிநீர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சட்டசபை இன்று கூடுகிறது குடிநீர் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

ADDED : செப் 18, 2025 03:00 AM


Google News
புதுச்சேரி: இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

புதுச்சேரியின் 15வது சட்டசபையின் 6வது கூட்டத் தொடரின் 2ம் பகுதி கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிரைவேற்றப்படுகிறது.

தொடர்ந்து கூட்டத்தில் ஜி.எஸ்.டி., திருத்த மசோதா, புதுச்சேரி எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இக்கூட்டத்தில், மின்துறை தனியார் மயம், மின் மீட்டர் விவகாரம், குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம், இலவச அரிசி நிறுத்தம், இலவச கோதுமை, சென்டாக் கல்வி நிதி, மகளிர் உதவித் தொகை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us