Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டி; புதுச்சேரி அணிக்கு மூன்றாம் பரிசு

டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டி; புதுச்சேரி அணிக்கு மூன்றாம் பரிசு

டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டி; புதுச்சேரி அணிக்கு மூன்றாம் பரிசு

டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டி; புதுச்சேரி அணிக்கு மூன்றாம் பரிசு

ADDED : ஜூன் 05, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி; இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி ஆண்கள் அணி மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்திய அரசின் விளையாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின், அகில இந்திய சீனியர் மற்றும் ஜூனியர் கோப்பை 2025-- 2026க்கான போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நகரா பகவன் கங்ரா மைதானத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதிவரை நடைபெற்றது.

இப்போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் 'டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி' அணியினர் செயலாளர் ரத்தினபாண்டியன் மற்றும் கேப்டன் தர்மராஜ் தலைமையில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, தெலுங்கான, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் பங்கேற்ற இப்போட்டியில், நான்கு பிரிவுகளிலும் லீக் சுற்றுகளில் புதுச்சேரி அணி 3- 0 என்ற புள்ளி வரிசையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது. தெடார்ந்து ஹரியானா அணியை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதியில் மகாராஷ்டிரா அணியுடன் மோதி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டு, மூன்றாம் இடத்தை பிடித்தது. அகில இந்திய போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து புதுச்சேரி அணியினர் கவுரவிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us