/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : ஜன 06, 2024 06:16 AM
புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சி சார்பில் நடக்கும் வீட்டு வரி, சொத்துவரி, சேவை வரி வசூல் சிறப்பு முகாமில் பங்கேற்று வரி மற்றும் நிலுவை வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி சார்பில், வரி செலுத்துவோரின் நலன் கருதி, நாளை( 7ம் தேதி) வெங்கட்டா நகரில் அமைந்துள்ள, தமிழ்ச்சங்கத்தில், சொத்து வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி காமராஜர் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், பிருந்தாவனம், சாரம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வரி நிலுவைதாரர்கள், 2023 - 24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரியை செலுத்தலாம்.
மேலும் இன்று வி.வி.பி நகர் வீட்டு வரி வசூல் மையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2023-24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in எனும் முகவரியில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.