செம்படப்பேட்டையில் ஊஞ்சல் உற்சவம்
செம்படப்பேட்டையில் ஊஞ்சல் உற்சவம்
செம்படப்பேட்டையில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : மே 27, 2025 07:15 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு 9.40 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 9.40 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.