ADDED : ஜன 03, 2024 06:30 AM
புதுச்சேரி: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்தேவ் குமார் 24, இவர் சேதாரப்பட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 31ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் காலை திடீரென காய்சல் அதிகமானதால் அவருடன் தங்கியிருந்த சந்தோஷ்குமார் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.