ADDED : செப் 28, 2025 11:09 PM
புதுச்சேரி,:திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் 49, இவர் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு செக்யூரிட்டி வேலைக்கு கடந்த 16ம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்றார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை, வீட்டிற்கு வரவில்லை. இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் சேதாரப் பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.


