Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வாகிறார் இன்று தேசிய பொது செயலாளர் முன்னிலையில் பதவி ஏற்பு

பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வாகிறார் இன்று தேசிய பொது செயலாளர் முன்னிலையில் பதவி ஏற்பு

பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வாகிறார் இன்று தேசிய பொது செயலாளர் முன்னிலையில் பதவி ஏற்பு

பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வாகிறார் இன்று தேசிய பொது செயலாளர் முன்னிலையில் பதவி ஏற்பு

ADDED : ஜூன் 30, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இன்று மதியம் 12:00 மணிக்கு கட்சியின் தலைவராக பதவி ஏற்கிறார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ., அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல் கட்டமாக கட்சிக்கு 1.53 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்து கிளை தலைவர்கள், தொகுதி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என, வரிசையாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்து, மாநில தலைவர் தேர்தலுக்கும் பா.ஜ., தயாரானது. பா.ஜ., மாநில தலைவர் தேர்தல் பொறுப்பாளராக பஞ்சாப்பை சேர்ந்த தேசிய பொது செயலாளர் தருண் சுக் நியமிக்கப்பட்டார். அதையடுத்து, புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த 27ம் தேதி ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு 29, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு நேற்று காலை 10:00 மணிக்கு வேட்பு மனு துவங்கியது. 11.24 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாநில பொதுக் குழு உறுப்பினர் முன்மொழிந்தனர். வேட்பு மனுக்களை பா.ஜ., மாநில தேர்தல் அதிகாரி அகிலன், இணை தேர்தல் அதிகாரி வெற்றிசெல்வன் ஆகியோர் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்தனர்.

12:00 மணியளவில் வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ராமலிங்கம் மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர், புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இன்று மதியம் 12:00 மணியளவில் மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் பா.ஜ., விழாவில் முறைப்படி மாநில தலைவராக ராமலிங்கம் அறிவிக்கப்பட உள்ளார். மாநில தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிடும்போது தற்போதைய மாநில தலைவர் செல்வகணபதி மரபுபடி கட்சியின் கொடியை புதிய தலைவர் ராமலிங்கத்திடம் ஒப்படைக்க உள்ளார்.

தேசிய பொது செயலாளர் தருண் சுக் முன்னிலையில் நடக்கும் இந்த பதவி ஏற்பு விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரி காங்., ஆட்சியில் சபாநாயகராக இருந்த சிவகொழுந்துவின் சகோதரரான ராமலிங்கம், 22ம் தேதி மார்ச் மாதம் 1962 ஆண்டு பிறந்தார். இவர் 2019ல் இருந்து காங்., கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றிக்காக பணியாற்றினார். இதனால் 2021ம் ஆண்டு மே 11ம் தேதி நியமன எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நியமன எம்.எல்.ஏ.,வாக பணியாற்றினார்.

அவர், தற்போது கட்சியின் உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ., பதவியை உதறிவிட்டு, கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார். பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ள அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கூட்டணி கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர்

நவச்சிவாயம், செல்வகணபதி மனுதாக்கல்பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தபோது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தற்போதைய பா.ஜ., தலைவர் செல்வ கணபதி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.மாநில தலைவர் பதவி ஏற்பு விழாவில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட உள்ளது.



நியமன எம்.எல்.ஏ.,வை

துாக்கி வந்த நிர்வாகிகள்பா.ஜ., மாநில மூத்த தலைவர் செல்வம் நியமன எம்.எல்.ஏ., வாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். உடல்நிலை சரியில்லாத அவரால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வர முடியவில்லை. அதை கண்ட நிர்வாகிகள் அவரை குண்டு கட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு துாக்கி வந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us