/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது

தலைமை பொறியாளர் அறைக்கு சீல்
நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்த சி.பி.ஐ., டி.எஸ்.பி., ஜெயசீலன் தலைமையிலான குழுவினர், புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக தலைமை பொறியாளர் அறையை சோதனையிட சென்றனர். விடுமுறை நாள் என்பதால், அலுவலர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், தலைமை பொறியாளர் அலுவலக அறையை சி.பி.ஐ., அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
2வது நாள் சோதனை
புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் நேற்று 2வது நாளாக சோதனை நடந்தது. காலை முதல் மதியம் வரை நடந்த சோதனையில், வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
அனல் பறந்த அமைச்சர் அலுவலகம்
காரைக்கால் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம், தலைமை பொறியாளர் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி கொண்டிருந்த நேரத்தில், நேற்று காலை புதுச்சேரி சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பல அதிகாரிகள் அமைச்சர் அலுவலகம் வந்து சென்றவாறு இருந்தனர்.