Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

ADDED : ஜன 28, 2024 04:37 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு நடக்கும் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை துவங்குகிறது.

பி.எஸ்.என்.எல்., முதன்மை மேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சார்பில், சிறப்பு விற்பனை முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், வில்லியனுார் ஏழை மாரியம்மன் கோவில் அருகில், ரங்க பிள்ளை வீதி தொலைபேசி நிலையம், திருக்கனுார், பாகூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

வாடிக்கையாளர்கள் தற்போதைய எண்ணை மாற்றாமல் அதிவேக எப்.டி.டி.எச் தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் இலவசம். புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329 முதல் கிராமப்புறங்களில், ஆறு மாதங்களுக்கு, ரூ.999,க்கு கிடைக்கும்.

மேலும், ரூ.269 மதிப்புள்ள சிம் கார்டு, ரூ. 50க்கு வழங்கப்படுகிறது. இதில், 45 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாத அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம். பிற நெட் ஒர்க்கில் இருந்து, எம்.என்.பி., மூலம், பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு, ரூ.269 மதிப்புள்ள, சிம் இலவசம்.

தற்போது, 2ஜி, 3ஜி, சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக, 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம். முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us