ADDED : அக் 21, 2024 05:51 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: கனமழைக்கு இடிந்து விழுந்து வீட்டிற்கு நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரையாம்புத்துார் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டியன், 37, என்பவரது குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
தகவலறிந்த துணை சபாநாயகர் ராஜவேலு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, துணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.


