ADDED : மே 22, 2025 03:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
விழாவில், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 45 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.