ADDED : ஜூன் 21, 2025 01:03 AM

நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் தியாகி தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் நோட்டு வழங்கும் விழா நடந்தது.
தலைமையாசிரியர் லிங்குசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு இலவச புத்தகம், நோட்டுகளை வழங்கி, வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.