Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை

பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை

பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை

பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை

ADDED : செப் 04, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட் மாணவர்கள் மாநில அளவிலான கேரம் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முத்தியால்பேட்டையில் 18வது மாநில அளவிலான கேரம் போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி எலைட் மாணவர்கள், ஜூனியர் பிரிவில் மாணவர்கள் சத்திய பிரகாஷ், ஹேமச்சந்திரன், ஸ்ரீராம் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், பெண்கள் பிரிவில் மாணவிகள் சுவேதா, யுவஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பிடித்து சாதனை படைத்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் சான்றிதழ்கள் வழங்கினர். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கராத்தே சங்க செயலாளர் வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us