Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மரணம் போலீசார் விசாரணை

முதியவர் மரணம் போலீசார் விசாரணை

முதியவர் மரணம் போலீசார் விசாரணை

முதியவர் மரணம் போலீசார் விசாரணை

ADDED : ஜூன் 23, 2025 05:06 AM


Google News
பாகூர் : பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து முதியவர் இறந்தார்.

தவளக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் தேவநாதன் 65; இவர் கடந்த 17 ம் தேதி டீ குடிப்பதற்காக தவளக்குப்பம் கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது, தனது ஸ்கூட்டர் நிறுத்துவதற்காக ஸ்டேன்ட் போட முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தேவநாதனுக்கு மீண்டும் உடல் நிலை பாதித்ததால் கடந்த 19ம்தேதி தேவநாதனை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us