/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரத்தவெள்ளத்தில் சடலம் போலீசா் விசாரணை ரத்தவெள்ளத்தில் சடலம் போலீசா் விசாரணை
ரத்தவெள்ளத்தில் சடலம் போலீசா் விசாரணை
ரத்தவெள்ளத்தில் சடலம் போலீசா் விசாரணை
ரத்தவெள்ளத்தில் சடலம் போலீசா் விசாரணை
ADDED : செப் 06, 2025 03:14 AM
நெட்டப்பாக்கம்: சிமென்ட் வாய்க்காலில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மடுகரை, சாட்டைகோல், பாட்டை சாலையில் உள்ள வடிகால் வாய்காலில் 55 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத நபர், ரத்தவெள்ளத்தில் நேற்று இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அவ்வழியாக சென்ற மடுகரையைச் சேர்ந்த சுப்பரமணி என்பவர், மடுகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.