Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கப்பலில் கவியரங்கம் 

கப்பலில் கவியரங்கம் 

கப்பலில் கவியரங்கம் 

கப்பலில் கவியரங்கம் 

ADDED : செப் 09, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி, வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில் துறைமுக எக்ஸ்போ மைதானத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாளை முன்னிட்டு 'சீகல் க்ரூஸ்' என்ற கப்பலில் கவியரங்கம் நடந்தது.

ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஆய்வாளரும், இயக்கத்தின் நிறுவ னருமான கலைவரதன் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், சந்திரன், பிரான்சு நாட்டை சேர்ந்த பத்திரிசியாபாப்புராயர் கலந்து கொண்டு கவியரங்கை துவக்கி வைத்தனர்.

கவியரங்கை செயலாளர் கலைவாணி கணேசன், வெற்றிவேலன், பத்மநாபன், நித்தியா, பச்சையம்மாள், மாவட்ட பொறுப்பாளர்கள் அழகு, ஷர்மிளா, அமுதா, கோகுல்ராஜ் ஒருங்கிணைத்தனர்.

பேராசிரியர் கயல்விழி, வேல்விழி தொகுத்து வழங்கினர். ரத்தினவிநாயகம் வரவேற்றார்.இதில், திரளான கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.

பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. புவனா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us