/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை துன்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு பெண்ணை துன்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
பெண்ணை துன்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
பெண்ணை துன்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
பெண்ணை துன்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
ADDED : மே 24, 2025 11:26 PM
புதுச்சேரி: விசாரணை என்ற பெயரில் பெண்ணை துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண், உறவினர்களுடன் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரசி, 37; அப்பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியர். கடந்த 11ம் தேதி, ஓட்டலில் சுற்றுலா பயணி தங்கியிருந்த ஒரு அறையை, ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அதன் பின், வெளியில் சென்று விட்டு சுற்றுலா பயணி தனது அறைக்கு வந்தார். அவர் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து, அந்த சுற்றுலா பயணி, தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, சந்தேகத்தின் பேரில், ஓட்டலில் பணி செய்த கலையரசி உட்பட 5 பெண்களிடம் தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த, கலையரசியின் கணவர் அர்சுணன், 53, மனமுடைந்து திடீரென மயங்கி விழுந்தார். உடன் அவர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
பாதிக்கப்பட்ட கலையரசி தனது உறவினர்கள் மற்றும் கம்யூ., ராஜாங்கம் ஆகியோர், நேற்று கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து, மனு அளித்தனர். அதில், விசாரணை என்ற பெயரில், பெண்ணை துன்புறுத்திய சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மனு மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.