சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்
சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்
சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்

மக்கள் உயிருக்கு ஆபத்து
புதுச்சேரியில் அனுமதி பெறாமலும், சட்ட விரோதமாகவும் பேனர்கள் தாறுமாறாக வைக்கப்பட்டு வருகிறது. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதால் தினந்தோறும் விபத்துகள் நடக்கிறது.
மறந்து போன கடமை
பேனர்களை அகற்ற வேண்டிய அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. பொதுப்பணித்துறை அல்லது நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான சாலைகளில் தான் பேனர்கள் வைக்கப்படுகின்றன. பேனர்களை அனுமதி இல்லாமல் வைக்கும்போது, பொதுப்பணித் துறையோ அல்லது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளோ நேரடியாக அகற்றலாம்.
என்ன செய்ய வேண்டும்?
சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கு ஒருங்கிணைப்பு தேவையாக உள்ளது.
சி.எஸ்., மேற்பார்வையில்...
பொதுமக்கள் நலன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தலைமைச் செயலர் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசு அதிகாரிகளின் தலைவராக உள்ள தலைமைச் செயலரின் நேரடி பார்வையில், பேனர் அகற்றும் குழுவினர் செயல்பட வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை, தலைமைச் செயலர் நேரடியாக பிறப்பிக்க வேண்டும்.