Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 101.5 டிகிரி வெயில் மக்கள் அவதி

101.5 டிகிரி வெயில் மக்கள் அவதி

101.5 டிகிரி வெயில் மக்கள் அவதி

101.5 டிகிரி வெயில் மக்கள் அவதி

ADDED : ஜூன் 02, 2025 01:17 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 101.5 டிகிரி வெயில் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த ஆண்டு கோடை காலத்தில் அதிக பட்சமாக 102 டிகிரி வெப்பம் பதிவானது.

அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4ம் தேதி துவங்கி 28ம் தேதி முடிவடைந்தது.

இந்த நாட்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனால், கோடை காலம் போனதே தெரியாமல் இருந்தது.

இந்த ஆண்டு கோடை வெயில், குறைவாக இருந்ததால், இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று 101.5 டிகிரி வெயில் அடித்தது.

காலையில் இருந்து மாலை வரை அனல் காற்று வீசியது. கோடைக்காலம் முடிந்த நிலையில், நேற்று அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.இதனால், பொது மக்கள் அவதியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us