/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு
அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு
அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு
அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு
ADDED : ஜூன் 19, 2025 05:30 AM
புதுச்சேரி : கடன் பிரச்னையால், அதிகமாக மது குடித்த பெயிண்டர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.
நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன், 52; பெயிண்டர். இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
வீட்டில் இருந்தவர்கள் அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.