Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதவி எஸ்.ஐ., பணிக்கு பெண்களுக்கு தளர்வு எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

உதவி எஸ்.ஐ., பணிக்கு பெண்களுக்கு தளர்வு எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

உதவி எஸ்.ஐ., பணிக்கு பெண்களுக்கு தளர்வு எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

உதவி எஸ்.ஐ., பணிக்கு பெண்களுக்கு தளர்வு எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

ADDED : செப் 21, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி:உதவி சப் இன்ஸ்பெக்டர் தகுதி தேர்வில் பெண்களுக்கு தளர்வு கொடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி காவல் துறையில் மத்திய அரசு மூலம் பொறுப்பேற்க வரும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக, முதுநிலை கண்காணிப்பாளர்களாக சிறப்பாக பணியாற்றி சென்றுள்ளனர்.

புதுச்சேரி காவல் துறையில் பதவி உயர்வில் பெண்கள் வருவது மிக அரிதாகவே அமைந்துள்ளது. உதவி ஆய்வாளர் தேர்வில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையே இதற்கு காரணம். உடல் தகுதித் தேர்வில் கெடுபிடிகளை விதித்து அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதம் இருந்தும் அவர்கள் புறம் தள்ளப்படுகின்றனர்.

கடந்த 2022ல் உதவி ஆய்வாளர் தகுதித் தேர்வில் பெண்களுக்கு சிறப்பு தளர்வுகள் அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் இவைகளில் அந்த தளர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கடந்த 16.06.2025ல் வெளியான உத்தரவுப்படி தற்பொழுது நடக்க உள்ள தேர்வில் இந்த தளர்வுகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

புதுச்சேரியில் முதலில் உடல் தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வானவர்களை வைத்து எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதால் பல திறமை உள்ள பெண்கள் உடல் தகுதித் தேர்வில் வடிகட்டப்பட்டு விடுகின்றனர்.

தமிழகத்தை போல் முதலில் எழுத்துத் தேர்வு நடத்தி, பிறகு உடல்தகுதி தேர்வு மேற்கொள்ளப்படுவதால் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதித் தேர்வுக்கு தங்களை முழு அளவில் தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்கின்றனர்.

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டின் படி எத்தனை இடங்கள் பெண்களுக்கு வருகிறதோ அந்த எண்ணிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதனால் முதலில் எழுத்துத் தேர்வை நடத்தி விட்டு, தேர்ச்சி பெறுபவர்களுக்கு பின்னர் உடல் தகுதி தேர்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us