ADDED : மே 13, 2025 12:27 AM
புதுச்சேரி : பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட மூதாட்டி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை, விடுதலை நகரை சேர்ந்தவர் ராசகண்ணு ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி வள்ளியம்மை, 79, இவர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருத்து சாப்பிட்டு வந்தார். தனது மகள் ஆதரவுடன் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, படுக்கைக்கு சென்றார். மறுநாள் காலையில், பார்க்கும் போது, அறையில் இருந்த மின்விசிறியில் அவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.