Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்'

ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்'

ஆக்கிரமிப்பு அகற்றி கொள்ள வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்'


ADDED : மார் 29, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 03:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கொள்ள வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் முதல் புதுக்குப்பம் கடற்கரை வரை சாலையில், கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால், சுற்றுலா வரும் பயணிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதனை அடுத்து, பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் தெற்கு கோட்டம் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிரிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us