ADDED : ஜூலை 02, 2025 01:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் தங்கி வேலை செய்துவந்த வடமாநில நபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் அஜய், 37; போரிக், 52; இவர்கள் இருவரும், புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். போரிக் கடந்த 25ம் தேதி காலை அவர் தங்கியிருந்த ரூமில் இல்லை. இவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவருடன் தங்கியிருந்த அஜய் கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.