/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நேஷனல் ஆங்கிலப் பள்ளி சாதனை முதல்வர், சபாநாயகர் பாராட்டு நேஷனல் ஆங்கிலப் பள்ளி சாதனை முதல்வர், சபாநாயகர் பாராட்டு
நேஷனல் ஆங்கிலப் பள்ளி சாதனை முதல்வர், சபாநாயகர் பாராட்டு
நேஷனல் ஆங்கிலப் பள்ளி சாதனை முதல்வர், சபாநாயகர் பாராட்டு
நேஷனல் ஆங்கிலப் பள்ளி சாதனை முதல்வர், சபாநாயகர் பாராட்டு
ADDED : மே 21, 2025 07:09 AM

பாகூர் : தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது.
தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
மாணவிகள் குருசந்திரா 492 மதிப்பெண் பெற்று முதலிடம், அஷ்விகா 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், பவித்ரா 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தேர்வு எழுதிய 75 மாணவர்களுள், 55 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.
அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். தமிழ் பாடத்தில் 30 மாணவர்கள், ஆங்கிலத்தில் 42 பேர், கணிதத்தில் 27 பேர், அறிவியலில் 36 பேர், சமூக அறிவியலில் 43 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றனர். அறிவியல் பாடத்தில், 4 பேர், சமூக அறிவியலில் 5 பேர் சென்டம் எடுத்தனர்.
மாணவர்கள் மற்றும் பள்ளி தலைவர் கிரண்குமார், தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் ஆகியோரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.
பள்ளி சேர்மன் கிரண்குமார் கூறுகையில் 'கிராமப்புற அளவில் எமது பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. மாணவர்களுக்கு யோகா, கராத்தே, பரதம், சிலம்பம், அபாகஸ் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
பிரி கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்ளுக்கு நன்றி' என்றார்.