Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கைலாசநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கைலாசநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கைலாசநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கைலாசநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

ADDED : மே 19, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
காரைக்கால் : காரைக்காலில் கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் பாரதியார் சாலையில் பிரசித்தி பெற்ற சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக முகூர்த்த காலுக்கு மஞ்சள், பால் தயிர் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து மகா தீபாரதனை நடந்தது.

பின்னர் முகூர்த்தக்கால் ஆலயத்தை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் நடப்பட்டது.

இதில் கோவில் தனி அதிகாரி காளிதாசன் மற்றும் கைலாசநாதர் திருப்பணி குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுடனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us