Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காப்பு கலை பயிற்சி வீரமங்கை விருது வழங்கல் 

தற்காப்பு கலை பயிற்சி வீரமங்கை விருது வழங்கல் 

தற்காப்பு கலை பயிற்சி வீரமங்கை விருது வழங்கல் 

தற்காப்பு கலை பயிற்சி வீரமங்கை விருது வழங்கல் 

ADDED : செப் 15, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 'மிஷன் வீரமங்கை' தலைப்பில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.

சீனியர் எஸ்.பி., ஈஷா சிங் ஏற்பாட்டில் நடந்த 'மிஷன் வீரமங்கை' தற்காப்பு கலை பயிற்சியில் 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 35 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். 10 நாட்கள் நடந்த பயிற்சி முகாமிற்கான நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு, தற்காப்பு கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.

இதில், திருக்கனுார் போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பயிற்சி பெற்ற மாணவிகள், தாங்கள் பயின்ற தற்காப்பு கலையை போலீசார் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us