Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'மன் கீ பாத்' நிகழ்ச்சி 29ம் தேதி ஒலிபரப்பு

'மன் கீ பாத்' நிகழ்ச்சி 29ம் தேதி ஒலிபரப்பு

'மன் கீ பாத்' நிகழ்ச்சி 29ம் தேதி ஒலிபரப்பு

'மன் கீ பாத்' நிகழ்ச்சி 29ம் தேதி ஒலிபரப்பு

ADDED : ஜூன் 25, 2025 01:15 AM


Google News
புதுச்சேரி, : பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்' நிகழ்ச்சி வரும் 29ம் தேதி வானொலியில் ஒலிபரப்பாகிறது.

இது குறித்து புதுச்சேரி வானொலி நிகழ்ச்சிப்பிரிவுத் தலைவர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பிரதமர் மோடி 'மன் கீ பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் வானொலி வழியாக ஊரையாடும் நிகழ்ச்சி வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகும். இதனைத் தொடர்ந்து உடனடியாக 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பு 'மனதின் குரல்' ஒலிபரப்பாகும்.

இந்த 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பு 'மனதின் குரல்' மீண்டும் அன்று இரவு 8:00 மணிக்கு மறுஒலிபரப்பாகும். இந்த இரு நிகழ்ச்சிகளும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us