ADDED : ஜன 05, 2024 06:35 AM
காரைக்கால் : காரைக்காலில் மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை சாலையில் தோமாஸ் அருள் வீதியை சேர்ந்த மாற்றுத்திரனாளி முகமது ஹாஜா, 43, என்பவர் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, முகமது ஹாஜாவை கைது செய்து, அவரிடம் இருந்து 500 ரூபாய் மற்றும் லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.