/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா
ADDED : ஜூன் 09, 2025 04:51 AM

காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்ச விழாவை முன்னிட்டு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடந்தது.
காரைக்கால், திருநள்ளாறில், பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினமும் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு வீதியுலா, செண்பகத்தியாகராஜ சுவாமி, வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது.
கடந்த 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தேர் திருவிழா கடந்த 6ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் ஸ்ரீசனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று தெப்ப உற்சவம் நடந்தது.
இன்று பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் விசாக தீர்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.