Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுமை துாக்கும் தொழிலாளி பலி

சுமை துாக்கும் தொழிலாளி பலி

சுமை துாக்கும் தொழிலாளி பலி

சுமை துாக்கும் தொழிலாளி பலி

ADDED : ஜூன் 18, 2025 04:45 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ், 43; அரிசி கடைகளில் சுமை துாக்கும் தொழிலாளி. இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குடிப்பழக்கம் உடைய ரமேஷ், நேற்று முன்தினம் செஞ்சி சாலை அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடப்பதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார், ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us