Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வரும் 16ம் தேதி மதுபான கடைகள் மூடல்: கலால் துறை உத்தரவு

வரும் 16ம் தேதி மதுபான கடைகள் மூடல்: கலால் துறை உத்தரவு

வரும் 16ம் தேதி மதுபான கடைகள் மூடல்: கலால் துறை உத்தரவு

வரும் 16ம் தேதி மதுபான கடைகள் மூடல்: கலால் துறை உத்தரவு

ADDED : ஜன 13, 2024 07:15 AM


Google News
புதுச்சேரி : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி புதுச்சேரி முழுதும் உள்ள மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரியில் வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்ளிட்ட அனைத்து வகை மதுபான கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us