Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரிக்கெட் பிரீ மியர் லீக் - 2025 போட்டி காரைக்கால் காவல் துறை வெற்றி

கிரிக்கெட் பிரீ மியர் லீக் - 2025 போட்டி காரைக்கால் காவல் துறை வெற்றி

கிரிக்கெட் பிரீ மியர் லீக் - 2025 போட்டி காரைக்கால் காவல் துறை வெற்றி

கிரிக்கெட் பிரீ மியர் லீக் - 2025 போட்டி காரைக்கால் காவல் துறை வெற்றி

ADDED : ஜூலை 03, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
காரைக்கால் : காரைக்காலில் இந்திய கடலோர காவல்படை சார்பில், நடந்த கிரிக்கெட் போட்டியில் காவல்துறை அணி முதல் பரிசை வென்றது.

காரைக்கால் மாவட்டத்தில் இந்திய கடலோரக் காவல்படை மையம் சார்பில், காரைக்கால் கிரிக்கெட் பிரீ மியர் லீக் - 2025 போட்டி கடந்த 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இதில் கடலோரக் காவல்படை, தனியார் துறைமுகம், காவல்துறை, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணியும், தனியார் துறைமுக அணியும் மோதின. இதில், காவல்துறை அணி வெற்றி பெற்று முதல் பரிசும், துறைமுகம் அணி இரண்டாம் பரிசும் பெற்றன.

வெற்றிப் பெற்ற அணிகளுக்கு இந்திய கடலோர காவல்படை மைய கமாண்டன்ட் சவுமய் சந்தோலா, எஸ்.பி., சுப்ரமணியன், ஓ.என்.ஜி.சி., காவிரி அசெட் மேலாளர் உதய்பாஸ் வான் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us