Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

ADDED : டிச 03, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார்: வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் திறப்பு திருமஞ்சனம், மாலை 7:00 மணியளவில் தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.

நேற்று காலை 9:00 மணியளவில் கைசிக புராணம் வாசித்தல் நிகழ்ச்சி, தொ டர்ந்து சாந்தாலட்சுமியின்உபன்யாசம், காலை 11:00 மணியளவில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரி சனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us