Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்

ADDED : மே 30, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி; தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி பதவிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியகாக உள்ள நிலைய அதிகாரிகளுக்கான, 3 ஆண், 2 பெண் என மொத்தம் 5 பேருக்கு நேரடித்தேர்வு, ஆட்சேர்ப்பு மூலமாக நிரப்ப எடுக்கப்பட்ட உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளது.இந்நிலையில்,புதுச்சேரியில் முதன் முறையாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றுள்ள 4 நிலைய அதிகாரிகள் பணிகளுக்கான பணி ஆணையை, முதல்வர் ரங்காமி நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், கோட்ட தீயணைப்பு, அதிகாரி, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us