/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
ADDED : மே 31, 2025 11:40 PM

அரியாங்குப்பம்: வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நிதிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. இரண்டாவது தவணையாக 3 பயனாளிகளுக்கு தலா 1.60 வீதம் 4.80 லட்சம் நிதிக்கானஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
தொடர்ந்து, மூன்றாவது தவணையாக 45 பயனாளிகளுக்கு தலா 70 ஆயிரம் வீதம் 31.50 லட்சம் ரூபாய், மேலும், ஒரு நபருக்கு 1.20 லட்சம், 2 நபர்களுக்கு தலா 1 .90 லட்சம் வீதம் 3.80 லட்சத்திற்கான நிதி ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன், மெல்கி தாஸ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.