/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதாரத் துறை வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு சுகாதாரத் துறை வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு
சுகாதாரத் துறை வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு
சுகாதாரத் துறை வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு
சுகாதாரத் துறை வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு
ADDED : ஜூன் 16, 2025 12:50 AM

புதுச்சேரி : சுகாதார துறையில் வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்து வருவதாக அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.
சம்மேளனத்தின் செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் முனுசாமி, வாரிசுதாரர்கள் நலச்சங்கத்தின் கவுரவத் தலைவர் பிரேமதாசன், ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆகியோர் கூறியதாவது:
சுகாதாரத்துறையில் கடந்த 2016ம் ஆண்டு செய்யப்பட்ட 88 வாரிசுதாரர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. தொடர்ந்து தற்போதும் வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்து வருகிறது.
சுகாதாரத்துறையில் மொத்தம் 1,539 காலி பணியிடங்களை குறைத்து 630 பணியிடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்து, மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, 5 சதவீதம் என, கணக்கிட்டு 31 பேருக்கு மட்டுமே வாரிசுதாரர் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாரிசுதாரர் பணிக்கு விண்ணப்பம் அளித்த தேதி, ஓய்வூதியம், சொத்து மதிப்பு உள்ளிட்டவைகளில் பல தவறான தகவல்களை குறிப்பிட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சிலருக்கு பணி வழங்க முடிவு செய்து, கோப்பு தயார் செய்துள்ளனர்.இதுபோல் பல முறைகேடுகளுக்கு காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யக்கோரிவரும் 18ம் தேதி சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, பெரியக்கடை போலீசில் புகார் அளிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.