Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 52 புகார்களுக்கு உடனடி தீர்வு

ADDED : ஜூன் 29, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி, : ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., வீரவல்லவன் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோல், காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி., சுப்ரமணியன், வில்லியனுாரில் எஸ்.பி., வம்சீதர ரெட்டி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., செல்வம் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 98 புகார்கள் பெறப்பட்டு, 52 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் மொத்தமாக 60 பெண்கள் உட்பட 242 பேர் பங்கேற்று புகார்களை அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us