Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் மக்கள் மன்றத்தில் 51 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 51 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 51 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 51 புகார்களுக்கு உடனடி தீர்வு

ADDED : ஜூன் 02, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
திருக்கனுார்: ஒதியன்சாலை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், சனிக்கிழமைதோறும் நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்திவம் ஒதியன்சாலை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், கிழக்கு எஸ்.பி., ஈஷா சிங் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருக்கனுார் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்,பி., கலைவாணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியா, தமிழரசன் ஆகியோர் பொதுமக்களிடம் புகார்களை பெற்றனர்.

இதேபோல், டி நகர் கோவில் நிலையத்தில் எஸ்.பி., வம்சீதரெட்டி, கிருமாம்பாக்கத்தில் தெற்கு எஸ்.பி., பக்தவசலம், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.க்கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 65புகார்கள் பெறப்பட்டு, 51 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று நடந்த மக்கள் மன்றத்தில் மொத்தமாக 31 பெண்கள் உட்பட 223 பேர் பங்கேற்று புகார் அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us