Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் மக்கள் மன்றத்தில் 24 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 24 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 24 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 24 புகார்களுக்கு உடனடி தீர்வு

ADDED : அக் 19, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி, நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், மேற்கு எஸ்.பி., சுப்ரமணியன் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல், சேதராப்பட்டில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், வடக்கு எஸ்.பி., ரகுநாயகம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தனர். ஒதியஞ்சாலையில் கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி, அரியாங்குப்பத்தில் தெற்கு எஸ்.பி., செல்வம், ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 38 புகார்கள் பெறப்பட்டு, 24 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us