ADDED : ஜூன் 17, 2025 11:29 PM
புதுச்சேரி: கனவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் கணுவாப்பேட் புதுநகர் ஓடை தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன் 37, தனியார் பஸ் டிரைவர். இவர் கடந்த 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.