Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர்

மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர்

மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர்

மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர்

ADDED : மே 19, 2025 06:30 AM


Google News
புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷகிலாபானு, 29; தனியார் மருத்துவனை செவிலியர். இவர் தனது கணவர் மணிகண்டனை பிரிந்து வாழ்கிறார். கடந்த 16ம் தேதி ஷகிலா பானு முதலியார்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்றார்.

அப்போது, அங்கு மணிகண்டன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்தார். இதனை ஷகிலாபானு தட்டிக்கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் ஷகிலா பானுவை பீர்பாட்டிலால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.

புகாரின் பேரில் மணிகண்டன் மீது உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us