Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவி மீது தாக்குதல் கணவர் கைது 

மனைவி மீது தாக்குதல் கணவர் கைது 

மனைவி மீது தாக்குதல் கணவர் கைது 

மனைவி மீது தாக்குதல் கணவர் கைது 

ADDED : பிப் 06, 2024 05:57 AM


Google News
புதுச்சேரி, : ஏனாமில், மனைவியை பூரி கட்டையால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஏனாம் பழைய ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஒளிந்தே வீரபாபு, 28; இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி மனோஜினியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் மது போதையில் மனைவியை அவதுாறாக பேசி, வீட்டில் இருந்த பூரி கட்டையால் தாக்கினார். அதில், அவர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மனோஜினி புகாரின் பேரில் ஏனாம் போலீசார் ஒளிந்தே வீரபாபு மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us