Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்டி கடையில் குட்கா பறிமுதல்

பெட்டி கடையில் குட்கா பறிமுதல்

பெட்டி கடையில் குட்கா பறிமுதல்


ADDED : ஜூலை 13, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 12:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே பெட்டி கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுகுப்பம் பள்ளி கூட வீதியில் உள்ள கடைகளில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி தலையிலான போலீசார், அங்கு சென்று கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த, 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் சிங் 48, மற்றும் வார்க்கால் ஓடையை சேர்ந்த வீரன் 54 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us