/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.23.77 கோடி மானியம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.23.77 கோடி மானியம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.23.77 கோடி மானியம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.23.77 கோடி மானியம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.23.77 கோடி மானியம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
ADDED : செப் 15, 2025 02:04 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க ரூ.23.77 கோடி ரூபாய் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் பணியா ற்றிம் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனை கண்டித்து அரசு நிதி உதவிபொறும் அசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து 32 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் 5 மாத சம்பளம், ஓய்வூதியர்களுக்கு ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள் ளார்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு: கவர்னர் அனுமதித்துள்ள நிதி 5 மாத சம்பளம், ஓய்வூதியம் பலன்களுக்கு செலவிடப்படும்.
சம்பளத்திற்கான மொத்த செலவில் 95 சதவீதம் அரசு ஏற்கும். 5 சதவீத்தை பள்ளி நிர்வாகம் ஏற்கவேண்டும். உரிய திருத்தம் செய்யப்படும் வரை 95 சதவீதம் மானியம் நேரடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.