Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

ADDED : செப் 04, 2025 02:28 AM


Google News
புதுச்சேரி : வலிப்பு ஏற்பட்டு சிறுமி பரிதாபமாக இறந்தார்.

உறுவையாறு, புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி; கூலித்தொழிலாளி. இவரது மகள் மஞ்சு, 11. இவருக்கு சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் இருக்கிறது. இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நள்ளிரவு 1:30 மணியளவில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us