sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்


ADDED : பிப் 17, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 06:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; லாஸ்பேட்டையில் இறந்த மூதாட்டியின் கண்களை, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை தாகூர் நகர் மெயின் ரோடு, சக்ரா அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் தளிஞ்சம்மாள், 86. இவர் வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் இறந்தார்.

இதையடுத்து, இவரது கண்களை தானம் செய்ய மகன்கள் கணபதி, பஞ்சாட்சரம், சுப்புராயன், மகள்கள் ஜெயக்குமாரி, ராணி, வசுந்தரா தேவி மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதற்காக, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டு, அவரது வழிகாட்டுதலின்படி, கண்களை தானம் செய்ய அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர் அக் ஷய் தலைமையிலான செவிலியர்கள் மவுனிகா, செல்வக்கனி ஆகியோர் வீட்டிற்கு வந்து கருவிழிகளை சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us