Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

ADDED : ஜன 20, 2024 06:00 AM


Google News
அரியாங்குப்பம் : மீன் பிடித்த போது படகில் கீழே விழுந்து காயமடைந்த மீனவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜிவ்காந்தி, 32; மீனவர். இவர் நேற்று முன்தினம் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றார்.

மீன் பிடித்து கொண்டிருந்தபோது, தடுமாறி படகில் விழுந்தார். மார்பில் பலத்த அடிப்பட்ட அவருக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us