ADDED : மே 28, 2025 11:41 PM
புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி மீனவர் இறந்தார்.
முத்தியால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 48; மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் சுரேஷ் இரு தினங்களுக்கு முன், மீன்பிடிக்க செல்வதாக தம்பியிடம் கூறிவிட்டு சென்றார். பின் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் இறந்த நிலையில் அவரது உடல் சோலை நகர் யூத் விடுதி கடற்கரையோரம் ஒதுங்கியது.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.